யாழ் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing யாழ் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கியிருந்த நிலையில் குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இச் சடலத்தின் உடற்பாகங்களில் பல பகுதிகள் சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments