வவுனியாவில் கடைத்தெருவில் அதிகாலை கிடந்த சடலம் – தீவிர விசாரணை!

You are currently viewing வவுனியாவில் கடைத்தெருவில் அதிகாலை கிடந்த சடலம் – தீவிர விசாரணை!

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று (15.05.2023) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தினர்.

சடலம் தடவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments