யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை! 71 குடும்பங்கள் பாதிப்பு!

You are currently viewing யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை! 71 குடும்பங்கள் பாதிப்பு!

வடக்கில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை! 71 குடும்பங்கள் பாதிப்பு! 1

 

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது”என குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments