யாழ். தாவடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து; 19 வயது இளைஞன் பலி!

You are currently viewing யாழ். தாவடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து; 19 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்ததாகவும் அதில் வந்த மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments