யாழ். தெல்லிப்பழை தாய் மரணம்: தலைமறைவான மகன் கைது !

You are currently viewing யாழ். தெல்லிப்பழை தாய் மரணம்: தலைமறைவான மகன் கைது !

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், சிறீலங்கா காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று காலை சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகள் இடம் பெறுவதோடு போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments