யாழ். நகரில் கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி கைது!

You are currently viewing யாழ். நகரில் கஞ்சா விநியோகிக்கும் முச்சக்கரவண்டி சாரதி கைது!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விநியோகித்து வந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட சிறீலங்கா குற்றத் தடுப்பு காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள