யாழ். பல்கலைக்கழகத்தில் ஆறாவது நாளாக இன்றைய தினமும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொது சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதன்பொழுது பல்கலைகழ மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் திலீபன் நினைவேந்தல்!
