சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் நேற்று (23) வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல், மின் கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

