யாழ் மாவட்டத்தில் மழையினால் மேலும் 92 குடும்பங்கள் பாதிப்பு!

You are currently viewing யாழ் மாவட்டத்தில் மழையினால் மேலும் 92 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மேலும் 92 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 317 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 2 வீடுகளின் உட்கட்டுமானம் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments