யாழ் வறணியில் காதலனுடன் சென்ற யுவதிக்கு நடந்த கொடுமை!

You are currently viewing யாழ் வறணியில் காதலனுடன் சென்ற யுவதிக்கு நடந்த கொடுமை!

யாழ்.வறணி மாசார் பகுதியில் காதலனுடன் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக காவல்துறையிடம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 8ம் திகதி யாழ்.சுன்னாகத்திலிருந்து சென்று வறணி -மாசார் பகுதியில் காதலர்களுடன் தனிமையில் இருந்தபோது காடையர் குழு ஒன்று வந்ததாகவும் அந்த குழு தம்மை இழுத்து சென்றதாகவும் அந்த குழுவிடமிருந்து

தாம் தப்பி வந்ததாகவும் ஒரு பெண் கொடிகாமம் காவல்துறையினர் கூறியிருந்தார். இதனையடுத்து இழுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை காவல்துறையினர் தேடினர்.

பின்னர் இழுத்து செல்லப்பட்டவர்களால் குறித்த பெண் விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் தன்மீது 3 ஆண்கள் பாலியல் பலாத்காரம் புரிந்த்தாக குற்றஞ்சாட்டி பருத்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள