யாழ். வீடுகளில் நள்ளிரவில் தொடர் கொள்ளை ! மக்கள் விசனம்!

You are currently viewing யாழ். வீடுகளில் நள்ளிரவில் தொடர் கொள்ளை ! மக்கள் விசனம்!

யாழ் ஏ9 வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் கச்சேரிக்கு அருகாமையால் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு நேரம் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக சிறீலங்கா காவற்துறையினருக்கு முறையிட்டாலும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

3 மாதங்களுக்குள் ஒரே வீட்டில் இருதடவைகளுக்கு மேல் நள்ளிரவு கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சிசிரிவி கமராக்கள் பொருத்தினாலும் குறித்த கமராக்களின் வயர்களை அறுத்து தொடர்பை துண்டித்த பின்னர் கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள்.

குறித்த வீடுகளில் லட்சக்கணக்கான பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளையர்களின் தொடர் செயற்பாட்டை பார்க்கும் போது ஒரு சில சிறீலங்கா காவற்துறையினருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் தொடர்புகள் பேணப்படுகின்றதாக சந்தேகம் தோன்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments