யுக்திய நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! – ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை!

You are currently viewing யுக்திய நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! – ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை!

இலங்கை அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும், அது குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருளிற்கு எதிரான கடுமையான பாதுகாப்பை நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக இந்த நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டும் மீளாய்வு செய்யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட சமூக பொருளாதார குழுக்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள ஐநாவின் மனித உரிமை நிபுணர்கள் கட்டாய இராணுவ புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளனர்.

யுக்திய எனப்படும் நடவடிக்கையின் போது சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான கடும் ஒடுக்குமுறை காணப்படும் காணப்படும் சூழமைவில் இது கவலையளிக்கின்றது என ஐக்கியநாடுகள் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments