ரஷ்யாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!

You are currently viewing ரஷ்யாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!

ரஷ்யாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சகலின் தீவில் Tymovskoye நகரில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தினால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்டும் பணி தொடங்கியது.

மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில், எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்தது. இதுவரை 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிடத்தில் வசித்ததாக அறியப்பட்ட 33 பேரில் சிலர் கணக்கில் வரவில்லை என சகலின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 500,000 ரூபிள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments