ரஷ்யாவை எதிர்ப்பவர்களுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்! எச்சரித்த புடின்!

You are currently viewing ரஷ்யாவை எதிர்ப்பவர்களுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்! எச்சரித்த புடின்!

“ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்” என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் சுயாட்சியை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவும் ராணுவத்தை அனுப்பினார். உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தை வெளியிடும் முன் அணு ஆயுதங்கள் குறித்து புடின் உலகை, குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யா. மேலும், ரஷ்யாவிடம் ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. எனவே ரஷ்யாவை யார் தாக்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு உலகத் தலைவர் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வெளிப்படையாக எச்சரித்தார். இது ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.   

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments