ராஜபக்சக்களது தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணைவேண்டும் கஜேந்திரன் வலியுறுத்தல்!

You are currently viewing ராஜபக்சக்களது தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணைவேண்டும் கஜேந்திரன் வலியுறுத்தல்!

பேரூந்துகளில் குண்டுகள் வைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சக்களது சதியே என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று ( 05.09.2023) செவ்வாய்க்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுதேச வைத்தியத்துறை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து ராஜபக்சக்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா – கஜேந்திரன் அவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்

2009,ற்கு முன்னர் பேரூந்துகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், பௌத்த துறவிகள் மீது இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்   கள்,சிங்கள மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் திருப்பி தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை அரங்கேற்றுவதற்காக ராஜபக்சக்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சதித்திட்ட தாக்குதல்களேயாகும்.

இது பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டுமானால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப் படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பிலான இன்றைய நாடாளுமன்ற உரையின் முழுமையான விடயங்கள் அடங்கிய காணொளி                   இணைக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments