லண்டனில் கொரோனா உச்சம்: பொதுப் பேருந்து சாரதிகள் பலரும் பலி!

You are currently viewing லண்டனில் கொரோனா உச்சம்: பொதுப் பேருந்து சாரதிகள் பலரும் பலி!

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள் பேருந்தின் சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்.


மேலும் நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும் பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் தெரிவித்துள்ளார்.

பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் .

அவ்வாறான பயணிகள் ஊடாக இந்த நோயானது அவர்களைத் தொற்றி பலியாகியுள்ளனர்.

லண்டனில் இதன் சாரதிகள் இல்லை என்றால் மக்கள் நடமாட்டம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது.

பகிர்ந்துகொள்ள