வடக்கில் எல்லைதாண்டி நடைபெறும் வன்முறைகள்!

You are currently viewing வடக்கில் எல்லைதாண்டி நடைபெறும் வன்முறைகள்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதியிலுள்ள வீதியில் வைத்து நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த வன்முறை கும்பல், இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளது.

அவ்வேளை, இளைஞர் மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு, அந்த கும்பலிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அதனையடுத்து, இளைஞரின் வீட்டுக்குச் சென்ற அந்த கூட்டத்தினர், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை

வவுனியா – ஓயார்சின்னக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments