வடக்கில் கட்டாய முகக்கவசம் கொரோன-கட்டுப்பாட்டு நடவடிக்கை!

You are currently viewing வடக்கில் கட்டாய முகக்கவசம் கொரோன-கட்டுப்பாட்டு நடவடிக்கை!

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல்

கிளிநொச்சி காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இதேவேளை வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா போன்ற மாவட்டங்களில் வீதியால் செல்லும் மக்கள் கட்டாய முகக்கவசம் அணியவேண்டும் என்று கண்காணிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் சிறப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பார்வையிட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன், முக கவசம் அணிவது தொடர்பில் கடும் எச்சரிக்கைகளையும் விடுத்த வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள