வடக்கில் நேற்றும் 25 பேருக்கு கொரோனா!

You are currently viewing வடக்கில் நேற்றும் 25 பேருக்கு கொரோனா!

வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 460 பேருடைய மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேருக்கும் வவுனியாவில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் மூவருக்கும் மன்னாரில் ஒருவரும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஐவருக்கும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஐவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இருவருக்கும் பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதி அண்மைய நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஐவருக்கும் வவுனியா பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments