வடக்கில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing வடக்கில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ். குடா நாட்டில் 12 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார திணைக்கள தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (ஏப்-28) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வட மாகாணத்தில் 13 பேர் உட்பட 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் 297 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு – 03

யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரி பிரிவு – 02

கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவு – 01

கோப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு – 01

வேலனை சுகாதார அதிகாரி பிரிவு – 01

இவ்வாறு யாழ். மாவட்டத்தை சேர்ந்த எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் 363 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை – 02

யாழ். சிறைச்சாலை – 02

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை – 01

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் – 01

இவ்வாறு யாழில் நால்வர் உள்ளடங்கலாக வடக்கில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இன்றைய பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 12 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments