வடமராட்சிக்கிழக்கில் கடற்படை துப்பாக்கி சூடு!

You are currently viewing வடமராட்சிக்கிழக்கில் கடற்படை துப்பாக்கி சூடு!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சட்ட விரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது கடற் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை கடற் படையினர் தடுத்து நிறுத்தியதோடு கடற்படையினரை மோதுவது போல வானத்தைச் செலுத்தி தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து டிப்பர் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதன்போது வாகனத்துடன் கூட வந்த மோட்டார் சைக்கிளும் கைவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பருத்தித் துறை பொலிசார் விசாரனைகாக சென்றுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments