வடமராட்சி கிழக்கு பகுதியில் கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது !

You are currently viewing வடமராட்சி கிழக்கு பகுதியில் கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது !

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, சந்தேகநபர், குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் அவரை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் தேடிவந்துள்ளனர்.

அதேவேளை, அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில், அவரது மனைவி வேறு ஒரு இடத்தில் உயிர்பாதுகாப்புக்காக தஞ்சம் கோரியுள்ளார்.

இந்நிலையில்,  தன்னையும் பிள்ளைகளையும் தாக்கியதாக மனைவி அளித்த முறைப்பாட்டிற்கமைய மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவன் மீது பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதால் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் உயிர்பாதுகாப்பு தேவை என மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரிடம் சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments