வடமராட்சி வல்லை விருந்தினர் விடுதியில் மோதல்- ஒருவர் பலி!

You are currently viewing வடமராட்சி வல்லை விருந்தினர் விடுதியில் மோதல்- ஒருவர் பலி!

வடமராட்சி- வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நாச்சிமார் கோவிலடி, திக்கம் என்ற முகவரியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்று தெரியவந்துள்ளது.

வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாகவும் உடைந்த போத்தல் உட்பட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் சிலர் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற விருந்தினர் விடுதிக்கு சென்ற நெல்லியடிப் சிறீலங்கா காவல்த்துறையினர் குறித்த விடுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments