வன்னி காட்டுக்குள் காணாமல் போன பல்கலை மாணவர்கள்!

You are currently viewing வன்னி காட்டுக்குள் காணாமல் போன பல்கலை மாணவர்கள்!

கள ஆய்வுப் பணிகளுக்காக முல்லைத்தீவு- முத்தையன்கட்டு காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போன யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் ஆய்வு பணிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேர் காட்டுபகுதியில் தடம்மாறி சென்று காணாமல்போயிருந்தனர். 

இதனையடுத்து பொலிஸார் மற்றும் 64வது படைப்பிரிவு இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்

பகிர்ந்துகொள்ள