வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல்!

You are currently viewing வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல்!

வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில்நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்ணின் மீது சராமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வயோதிப தந்தை மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பெண்மணியின் கழுத்தில் மஞ்சல் கயிற்றில் இருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையர்கள் அறுத்துள்ளதுடன் வயோதிபர் மீதும் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான வயோதிப தம்பதிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments