வல்வையில் புலியின் சின்னத்தால் பதறிய பொலீசாரும் படையினரும்!

You are currently viewing வல்வையில் புலியின் சின்னத்தால் பதறிய பொலீசாரும் படையினரும்!

வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலியின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தத் தொடரின் போது அந்தச் சின்னம் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் மைதானத்திலிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள