வவுனியாவில் இளைஞனின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு!

You are currently viewing வவுனியாவில் இளைஞனின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு!

வவுனியா – காத்தார் சின்னகுளம் பகுதியில் இன்று எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று காலை வெளியில் சென்று விட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments