சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தென்மராட்சி வீரருக்கு வெண்கலப் பதக்கம்!

You are currently viewing சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தென்மராட்சி வீரருக்கு வெண்கலப் பதக்கம்!

ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசிய, பசுபிக், ஆபிரிக்க பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புஷாந்தன் பல போட்டிகளில் கலந்துகொண்டு சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியிலும் பங்கேற்று சாதித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments