வவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்!

You are currently viewing வவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்!

வவுனியா- சிவபுரம் வீதியில் நீர் வியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியுடன் ஒருவரின் சடலம் காணப்படுவதாக, இன்று காலை காவல்த்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குழியில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் பாதுகாப்பற்ற குழி என்ற சமிக்ஞைகளும் காணப்பட்டவில்லை. இந்தக் குழியிலேயே வீதியால் சென்ற ஒருவர் வீழ்ந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குழியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர், 4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்த ஜெயராசா குலேந்திரன் எனவும் அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உணவை பெறுவதற்காக சிவபுரத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றிருந்ததாக நெளுக்குளம் காவல்த்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்! 1
வவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்! 2
வவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்! 3
பகிர்ந்துகொள்ள