வவுனியாவில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட 6 வயது சிறுமி ! இளைஞன் கைது!

You are currently viewing வவுனியாவில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட 6 வயது சிறுமி ! இளைஞன் கைது!

வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் இன்று இடம்பெற்றதாக பூவரசன்குளம் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை.

இந்தநிலையில், பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமியை அவரின் தாயார் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனால் வீட்டின் உரிமையாளர்களால் பூவரசன்குளம் வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் சிறுமி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகனான குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments