வவுனியாவில் மாட்டுடன் மோதிய அதிரடிப்படை வாகனம்!- 2 பேர் பலி, 6பேர் காயம்.!

You are currently viewing வவுனியாவில் மாட்டுடன் மோதிய அதிரடிப்படை வாகனம்!- 2 பேர் பலி, 6பேர் காயம்.!

வவுனியா -வெளிக்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் மாட்டுடன் மோதிய அதிரடிப்படை வாகனம்!- 2 பேர் பலி, 6பேர் காயம்.! 1

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments