வவுனியாவில் மாவீரர்நாள்!

You are currently viewing வவுனியாவில் மாவீரர்நாள்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மாவீரர்
கப்டன் புயல்வேந்தன் அவர்களின் தாயார் பொதுச்சுடரை ஏற்ற,

சமநேரத்தில் கடற்புலிகள் படையணியைச் சேர்ந்த மாவீரர் லெப்டினன்ட் கேணல் இறைமதி,
மாவீரர் கப்டன் எழுகடல் ஆகியோரின் தந்தை மற்றும்
சகோதரன்,

குட்டிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த மாவீரர் 2ம் லெப்ரினன்ட் கதிர்கோதை அவர்களின் சகோதரன் ஆகியோர் ஈகைச்சுடர்களை ஏற்றினர்.

பகிர்ந்துகொள்ள