வவுனியாவில் 14 வயது மாணவிக்கு நேர்ந்த கதி! சந்தேகநபர் தலைமறைவு

You are currently viewing வவுனியாவில் 14 வயது மாணவிக்கு நேர்ந்த கதி! சந்தேகநபர் தலைமறைவு

வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி, கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது இளைஞர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி சம்பவம் தொடர்பில் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பெற்றோர் நெளுக்குளம் சிறீலங்கா காவற்துறை முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான இளைஞரை தேடி வருவதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments