வவுனியா நெளுக்குளம் குளத்தில் சடலம் மீட்பு!

You are currently viewing வவுனியா நெளுக்குளம் குளத்தில் சடலம் மீட்பு!

வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று புதன்கிழமை (10) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன்  சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு சிறீலங்கா பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில் நெளுக்குளம் சிறீலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் .

குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதினால் இச்சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என சிறீலங்கா  பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுப்பதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் சிறீலங்கா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட  நபர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments