வவுனியா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் இளம் குடும்ப பெண்!

You are currently viewing வவுனியா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில்   இளம் குடும்ப பெண்!

வவுனியா வைத்தியசாலையில் தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, அவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதாக உ.றுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அவருக்கு மற்றவர்கள் தீ வைத்தாரா அல்லது தனக்குத்தானே தீ வைத்தாரா என தெரியவில்லை கூறிய மாமடு காவல்த்துறையினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை எரிந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் காணாமல் போயுள்ள நிலையில், நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போனவர்களிற்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள