விக்கியின் பதிலால் வாயடைத்துப் போன கோத்தபாயவின் ஹிரு தொலைக்காட்சி!!

You are currently viewing விக்கியின் பதிலால் வாயடைத்துப் போன கோத்தபாயவின் ஹிரு தொலைக்காட்சி!!

தமிழர்களிற்கு  இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் போராடினார்கள்  என தெரிவித்துள்ளார் க.வி.விக்னேஸ்வரன்.

கோட்டாபய ஆதரவு ஹிரு தொலைக்காட்சியில்,யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்ட அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

விக்னேஸ்வரன்: நீங்கள் பார்ப்பதை போன்று பயங்கரவாதிகள் என்று யாரையும் கூறுவதில்லை. தமது மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் அவர்கள் யுத்தத்தில் இறங்கினார்கள். அவர்கள் யுத்தத்தில் இறங்கியதற்கு காரணம் அரசாங்கமே.

கேள்வி: உலகநாடுகள் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பார்க்கையில், நீங்கள் அவர்களை பயங்கரவாத அமைப்பாக ஏற்கவில்லையா?

விக்னேஸ்வரன்:அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து அதனை கேட்பவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அது எப்படி சரியாகும்?

கேள்வி: ஆனால் அவர்கள் மனிதக்கொலையை செய்தமை, அப்பாவிகளை கொன்றமையை ஏற்க முடியுமா?

விக்னேஸ்வரன்:இவர்கள் (அரசு) வடக்கில் அப்பாவிகளை கொன்றதை சரியென கூற முடியுமா?

கேள்வி:  இராணுவத்தினர் புலிகளை தவிர, அப்பாவி மக்களை கொலை செய்தார்களா?

விக்னேஸ்வரன்:  2009 மே 18ஆம் திகதி வரை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனைவரும் அப்பாவி மக்கள். அவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.

கேள்வி:  அவர்களை அவ்வாறு அழைத்து வந்தது பிரபாகரனா? இராணுவமா? பிரபாகரனே அவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கலாம்

விக்னேஸ்வரன்:அவருக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே

கேள்வி: நீங்கள் கூறுவதை பார்த்தால் பிரபாகரன் ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் தெரியாது. மக்களை பாதுகாக்க அங்கு சென்றார் என்றுதான் எங்களிற்கு தோன்றுகிறது.

விக்னேஸ்வரன்:30 வருடமாக அரசுக்கு எதிராக போராடியவரை குழந்தையாக நான் கூறுவதில்லை.

கேள்வி:  நீங்கள் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளின் மயானத்தில் சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்  

விக்னேஸ்வரன்:  அந்த இடத்திற்கு சென்று, அந்த மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கடமை எமக்குள்ளது.

 கேள்வி:  நாட்டின் சட்டத்திற்கமைய பயஙகரவாத செயற்பாடுகளிற்கு ஏதேனும் வகையில் ஒத்துழைப்பு வழங்கும் எதனையும் செய்ய முடியாது. 

விக்னேஸ்வரன்:  எப்படியென்று சொல்லுங்கள் பார்ப்போம். இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என யார் சொன்னது? இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதா?

கேள்வி:நீங்கள் வடக்கில் புத்தர் சிலை வைக்கக்கூடாது என சொல்லியுள்ளீர்களே?

விக்னேஸ்வரன்:  பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அவற்றை வைக்க என்ன காரணம் என்றே கேட்டுள்ளேன்.

கேள்வி:  அதனால் உங்களிற்கு எதாவது பிரச்சனைகள் ஏற்படுகிறதா? 

விக்னேஸ்வரன்:  ஆம். சிங்கள மக்களை அங்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

பகிர்ந்துகொள்ள