விசுவமடுவில் துப்பாக்கிப் பிரயோகம்!

You are currently viewing விசுவமடுவில் துப்பாக்கிப் பிரயோகம்!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கை கலப்பாக மாறியுள்ளது.

இதன் போது அங்கிருந்த ஒருவர் இடியன் எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பான துப்பாக்கியை எடுத்து இளைஞர் ஒருவரை நோக்கித்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments