விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சென்னையில் கைது!

You are currently viewing விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சென்னையில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.

தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வலசரவாக்கத்தில் வசிக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர், சற்குணம் என்ற சபேசன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சற்குணம், இந்தியாவில் விடுதலைப்புலிகளது, அனுதாபிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் அண்மைக்காலமாக இந்திய புலனாய்வுப்பிரிவாலும் சிறீலங்கா அதிகார வர்க்கத்தாலும் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் எனும் பொய்க்கதை புனையப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments