விடுதி தனிமைப்படுத்தலில் 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்!

  • Post author:
You are currently viewing விடுதி தனிமைப்படுத்தலில் 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்!

வட ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து ஒஸ்லோ விமான நிலையத்திற்கு வந்த 300 க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை முதல் விமான நிலையத்தில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்று தொற்று பாதுகாப்புக்கு பொறுப்பான Ullensaker நகராட்சியின் தகவல் தொடர்பு மேலாளர் “Siri Wolland” கூறியுள்ளார்.

அவர்களில் நான்கு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன என்றும், அவர்கள் மேலதிக பரிசோதனைக்காக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் இருவருக்கு நோய்த்தொற்று இல்லை என்றும், மற்றைய இருவரும் பரிசோதனையின் பதில்களுக்காக காத்திருக்கின்றனர் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

விடுதி தனிமைப்படுத்தலில் 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்! 1

இந்த 300 க்கும் மேற்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, வெளிநாட்டவரில் பெரும்பாலோர் இன்று நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்கள் என்று Wolland மேலும் கூறியுள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள