விபத்தில் குழந்தையும் இளைஞனும் பலி!

You are currently viewing விபத்தில் குழந்தையும் இளைஞனும் பலி!

வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலும் பட்டா ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதியான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இவ் விபத்தில் 21வயது மதிக்கத்தக்க இளைஞரே உயிரிழந்தவராவர்

சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா போக்குவரத்து பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை

லொறியில் மோதுண்டு விபத்துக்குள்ளான 2 வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறை – பிபில பிரதான வீதியில் உள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த பெற்றோர் தமது 2 வயது 7 மாதமேயான குழந்தையோடு அருகில் உள்ள விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில், குழந்தை பெற்றோரிடமிருந்து நீங்கி வீதிக்குச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னரே குழந்தை உயிரிழந்ததாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை இங்கினியாகலை சிறீலங்கா பொலிஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments