129 இலங்கையர்களிற்கு சர்வதேச காவல்துறை சிவப்பு எச்சரிக்கை!!

You are currently viewing 129 இலங்கையர்களிற்கு சர்வதேச காவல்துறை சிவப்பு எச்சரிக்கை!!

தற்போது வெளிநாட்டில் உள்ள 129 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்த்துறை இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளில் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாயில் இருப்பதாகவும்  சிலர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள