ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்…

You are currently viewing ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்…

ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக நியமனம் செய்துள்ளது.

இவர் வட தமிழீழம் ,  வன்னி மண்ணை சொந்த இடமாக கொண்டதுடன் 2010ற்கு பின்பு தான் புலம் பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தாயகத்தில் சிறு வயதில் இருந்தே பல சமூக சேவைகளை முன்னெடுத்து வந்ததுடன், கனடாவில் குடியேறிய பின்னரும் அந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர் ஆவார்.

அவரது கடின உழைப்பினால் கிடைத்த இந்த பொறுப்பான பதவி அவரை விட, எமது இனத்தின் விடுதலைக்கு சர்வேதேச மட்டத்தில்  கிடைத்துள்ள   வெற்றி பாதையாகும் ..

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்… 1
பகிர்ந்துகொள்ள