![23வது நாளாக தொடரும் உண்ணாநிலைப் போராட்டம்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/06/2-1-1024x576.jpeg)
![23வது நாளாக தொடரும் உண்ணாநிலைப் போராட்டம்! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/06/1-1-1024x459.jpeg)
எங்களது இருபத்தி மூன்றாவது நாள் உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் கவலையான விடயத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 22 நாட்களாக உண்ணா நிலைப் போராட்டத்தில் இருந்த 17 உறவுகளுக்கும் வைத்தியர் வந்து எங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர்கள் உடனடியாக உண்ணாவிரத்தை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் உயிர் போய்விடும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட நூறுவீதம் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதனை அவர் உத்தியோகபூர்வமாக எங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில்தான் நாங்கள் தற்காலிகமாக எமது உறவுகளை நாங்கள் கட்டாயப்படுத்தி உண்ணாவிரதத்தை நிறுத்த வைத்துள்ளோம்.
ஆனால் இன்று புதிதாக இன்னும் சில உறவுகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். என் உடன்பிறவா உறவுகளுக்கு நாங்கள் கொடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் எங்களைப் பற்றிய பொய்யான செய்திகளையும் பொய்யான தகவல்களையும் வெளியில் பரப்ப வேண்டாம் ஏனென்றால் நாங்கள் வயிற்றினை வெறுமையாக்கி உடல்களை புண்ணாக்கி மிகவும் வேதனைப்பட்டு இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இருபத்தி இரண்டு நாட்கள் நாங்கள் கடந்து வந்த வேதனைகளும் சோதனைகளும் சவால்களும் எவராலுமே தாங்க முடியாது என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தயவு செய்து எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள் குரல் கொடுங்கள் என எமது உறவுகள் தெரிவித்துள்ளனர்