31,000 போதை மாத்திரைகள்; 868 சந்தேக நபர்கள் கைது!

You are currently viewing 31,000 போதை மாத்திரைகள்; 868 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (30) அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 868 சந்தேக நபர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது, மேலும் 5 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 120 கிராம் ஹெரோயின், 98 ஐஸ் மற்றும் 31,611 போதை மாத்திரைகள் உள்ளடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 123 கிலோகிராம் கஞ்சா மற்றும் 9,708 கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் 527 போதைப்பொருள் சந்தேக நபர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments