400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசு தீர்மானம்!

You are currently viewing 400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசு தீர்மானம்!

யாழ்.நாகவிகாரை உள்ளிட்ட பல இடங்களில் புத்தர் சிலைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் 400 முன்னாள் போராளிகளை கண்காணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சாம்பலில் இருந்து எழுந்து வருவார்கள் என லண்டன் இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாக அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் கவனம் செலுத்தி வருகின்றனர். வடமராச்சி பிரதேசத்தில் கிளைமோர் குண்டு வெடிப்பில் இரண்டு பொலிஸார் காயமடைந்ததை அடுத்து 

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக அதிகமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள