Facebook சமூகவலைத்தளத்தில் “லைக்” அழுத்தியவருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

You are currently viewing Facebook சமூகவலைத்தளத்தில்  “லைக்” அழுத்தியவருக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை!

சமூகவலைத்தளங்களூடாக இனவாதம்நிறவாதம் மற்றும் சமூக நீதிக்கு ஒவ்வாத விடயங்களை பரப்புவது குற்றங்களாக கருதப்படும் நிலையில், Facebook சமூகவலைத்தளத்தில் பதியப்பட்ட மேற்குறிப்பிட்ட வகையிலான பதிவொன்றிற்கு “லைக்” போட்டவரை சுவிற்சலாந்து நீதிமன்றம் குற்றவாளியாக கண்டுள்ளது.

சமூகநீதிக்கு புறம்பான மற்றும் தனிப்பட்ட மனிதர்களின் சிறப்புரிமையை அவமதிக்கும்விதத்திலான பதிவுகளை சமூகவலைத்தளங்களூடாக பரப்புவது குற்றம் என்ற நிலைபொதுவானதாக இருக்கும் நிலையில்இப்படியான பதிவுகளுக்கு “லைக்” போடுவதும்இப்படியான வெறுக்கத்தக்க பதிவுகளை பரப்புவதற்கு சமனானதாகும் என சுவிஸ் உயர்நீதிமன்றம் கருதுகிறது.

மேற்படி விடயமாக 2017 ஆம் ஆண்டில் தண்டம் விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்விடயத்தை சுவிஸ் உயர்நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றபோதேஉயர்நீதிமன்றம் இத்தண்டனையை இப்போது உறுதி செய்துள்ளது.

பகிர்ந்துகொள்ள