அமெரிக்கா அதிருப்தி : கொடூர கொலையாளிக்கு விடுதலையா!

  • Post author:
You are currently viewing அமெரிக்கா அதிருப்தி : கொடூர கொலையாளிக்கு  விடுதலையா!

மிருசுவிலில், பொது மக்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனைத் தீர்பளிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருப்பது தமக்கு பெரிய அதிருப்தியை தந்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட ருவிட்டர் செய்தியில், இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், “இலங்கையின் நீண்டகால சமாதானத்துக்கு நீதி, பொறுப்புக் கூறல் பொறிமுறை, நல்லிணக்கம் என்பன தேவை” எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள