அமைதி காக்குமாறு கோருகிறார் அமெரிக்க தூதுவர்!

You are currently viewing அமைதி காக்குமாறு கோருகிறார் அமெரிக்க தூதுவர்!

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அழைப்பு விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அனைத்து வன்முறைகளையும் அமெரிக்கா கண்டிப்பதுடன், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments