அரச அடக்குமுறைகளை தாண்டி, மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் தொடரும் மக்கள் போராட்டம்!

You are currently viewing அரச அடக்குமுறைகளை தாண்டி, மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் தொடரும் மக்கள் போராட்டம்!

தையிட்டியில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட மக்கள் போராட்டத்தின்போது, ஸ்ரீலங்கா காவல்துறை, நீதிக்கு புறம்பான விதத்தில் மக்கள் போராட்டத்தை கலைத்திருந்ததோடு, மக்களோடு போராட்ட களத்தில் நின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை நேற்றய தினம் அடாவடியாக கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய செயலாளருமான திரு. செல்வராஜா கஜேந்திரன் மட்டும் தனிமையில் இரவிரவாக அவ்விடத்திலேயே அமர்ந்திருந்து சனநாயக மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்திருந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதுசெய்யப்பட்டவர்கள், விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இடத்தில் மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை கைது செய்த வரைமுறை தொடர்பில் காவல்துறை மேலதிகாரிகள் நீதிமன்றுக்கு விளக்கமளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

காணொளி இணைப்பு:

https://youtu.be/oGc_37wbMtE

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments