அரச நிர்வாக இயந்திரத்தின் பின்னணியே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

You are currently viewing அரச நிர்வாக இயந்திரத்தின் பின்னணியே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

ஸ்ரீலங்காவை பொறுத்த வகையில் ஊடகத்துறையானது மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபரும் ஊடக செயற்பாட்டாளருமான இ.தயாபரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகவியலாளர்கள் இருவரைத் தாக்கியவர்கள் பொலிஸ் மற்றும் வனவள அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமானவர்கள், அவர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒளிப்படங்களும் வெளிவந்திருக்கின்றன.

இதிலிருந்து தெளிவாக தெரிகின்ற ஒரு விடயம் ஏதோவொரு வகையில் அரச நிர்வாக இயந்திர ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள